உறவின் வழி!

    தொண்டைமண்டல முதன்மையார்ச் சமூக வலைதளம்  

    கல்வி, வேலை வாய்ப்புச், செய்திமடல், திருமணத் தொடர்பு, வரன் தேடல்...சங்கச் செய்திகள்..
    இவற்றுடன்......
    கதை, கட்டுரை, கவிதை இலக்கியம் படைத்துப் பயன் பெறுங்கள்... படித்து இன்புறுங்கள்...பயனீட்டாளராக தொடர்பு கொள்ளுங்கள்....
    +919940061280
    கல்வி, வேலை வாய்ப்புச், செய்திமடல், திருமணத் தொடர்பு, வரன் தேடல்...சங்கச் செய்திகள்..
    இவற்றுடன்......
    கதை, கட்டுரை, கவிதை இலக்கியம் படைத்துப் பயன் பெறுங்கள்... படித்து இன்புறுங்கள்...பயனீட்டாளராக தொடர்பு கொள்ளுங்கள்....
    +918939658282
    உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளுங்கள்

    சேக்கிழார்

    ஓரைந்து நாமமென்றும்,
    ஈரேழு லோகமென்றும்,
    மூவாறு புராணமென்றும்,
    நான்குவித வேதமென்றும்,
    ஐந்துவகைப் பூதமென்றும்,
    ஆறுகதைப் பலவும் சொல்லி,
    ஏழுலகும் தேடிவிட்டு;
    எட்டுதிக்கும் புரியாமல்,
    ஓடிநின்ற மக்களுக்கு;
    ஓரைந்து நாமத்தின்,
    உயர்வினையும் சொல்லி வைத்து,
    சிவத்தொண்டுப் புரிந்தாரின்,
    சீர்பெருமைப் தேக்கிவைத்து,
    திருத்தொண்டர் புராணத்தைத்,
    தருவாக்கித்தந்து, நிலம்;
    சைவத்தின் பெருமைதனைச்
    சாற்றிவிட எழுந்தக் கோமான்!
    குன்றத்தூர்ப் பிறந்த கவி,
    குன்றத்து விளக்காக,
    தமிழ்க்கால வரலாற்றைத்
    தவறாமல் சொன்ன கவி!
    அருண்மொழித் தேவன் அன்னான்;
    அருளெல்லாம் நீடு வாழ,
    ஆயிரம் கரம் கொண்டு,
    வாழ்கவென வாழ்த்துவேனே!

    கவிவளவன் 14. 8.1999

    CONTACT US
    Sekkizhar.net
    22, R.B. Avenue First Street,
    SEMBAKKAM, CHENNAI - 73
    Email: mail2mangai@rediffmail.com
    Ph: +919940061280

    உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
    நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
    அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
    மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்!
    -- சேக்கிழார்